ஞாயிறு, 19 ஜூலை, 2020

கதை கேட்கலாம் வாங்க

பள்ளி விடுமுறை விட்டதிலிருந்து ஊரடங்கு துவங்கிய தினம் முதல் என்னோடு வாசிக்கத் துவங்கி என்னை முந்திக் கொண்டு வாசித்துக் கொண்டே இருந்தாள் மகள்...



பொன்னியின் செல்வன் முடித்து, பூவிதழ் உமேஷ், வானம் வெங்கட், மு.முருகேஷ்,முருகேசன், கன்னிக்கோவில் ராஜா என நண்பர்களின் புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்து விட்டு இப்போது வேள்பாரி முடிக்கப் போகிறாள். அதுவும் போக இருக்கும் நேரத்தில் நான் வாசிக்கும் கவிதைப் புத்தகங்களை வாசித்துவிட்டு உரையாடுகிறாள். சில கவிதைகளை, கதைகளை எழுதி மிரட்டுகிறாள்.

இரண்டு மாதமாக நிறைய கதைகளை சொல்லி, பதிவு செய்து விட்டு காணொலியாக மாற்றித் தர வேண்டி நச்சரித்தாள். தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தவன் இன்று கொஞ்சம் வழி காட்ட அவளே செய்து முடித்து விட்டாள்.

இது அவள் சொன்ன கதை,  அவள் வாசித்த புத்தகத்திலிருந்து.
யூட்யூப் சேனல் அவளே துவங்கி விட்டாள்

கேளுங்க

https://youtu.be/6lBOVBAtYQI 

10 கருத்துகள்:

  1. குழந்தைகள் இவ்வாறுதான் வளர்க்கப்படவேண்டும். இவ்வாறான முயற்சிகள் பிற குழந்தைகளுக்கும் உதாரணமாக அமையும். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமை..
    இளையவளுக்கு வருங்காலம் சிறப்பானதாக வசப்படும்.
    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. அருமை. மகளின் கதை சொல்லும் விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  4. அடடா...மழலை மொழியில் கதை...திரும்பத் திரும்பக் கேட்டேன் .இன்று எனக்கு நல்ல கதை கேட்ட திருப்தி

    பதிலளிநீக்கு
  5. ஆகா
    பூபாலன்
    குழந்தைக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு