நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு
திங்கள், 11 மார்ச், 2024
நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு நூல் அறிமுகம் - கவிஞர் இளையவன் சிவா
நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு கவிஞர் ஜி.சிவக்குமார் நூல் அறிமுக உரை
எனது நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஜி.சிவக்குமார் அவர்கள் எழுதிய நூல் அறிமுக உரையை இங்கு பகிர்கிறேன்...
நின் நெஞ்சு நேர்பவள்
கவிதைகள்
நூல் அறிமுகம் : கவிஞர் ஜி.சிவக்குமார்
புதன், 28 பிப்ரவரி, 2024
சலுகை விலையில் எனது கவிதை நூல்கள்
வணக்கம்,
எனது ஹோ என்றொரு கவிதை, நின் நெஞ்சு நேர்பவள் ஆகிய இரண்டு கவிதை நூல்கள் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களால் வெளியிடப்பட்டன.
250 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்களும் சலுகையில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வேண்டும் நண்பர்கள் 98422 75662 எனும் எனது எண்ணுக்கு கூகுள் பேவில் தொகை அனுப்பிவிட்டு, வாட்சப்பில் முகவரி அனுப்புங்கள். புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்
செவ்வாய், 20 பிப்ரவரி, 2024
எனது இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பு
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்
ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024
தேநீர்க் கவிதைகள் - பொற்றாமரை இதழில்
இந்த மாத பொற்றாமரை இணைய இதழில் எனது நான்கு தேநீர்க் கவிதைகள் இடம் பெற்றுள்ளன..
தேநீர் # 1
தேநீரைப் பற்றி
எழுதப்பட்டிருக்கின்றன ஓராயிரம் கவிதைகள்
தேநீர் அழகிய ஓவியங்களாகி
ஆவி பறக்கிறது
தேநீர்க் கோப்பையோடு
புகைப்படங்களைப் பகிர்ந்து
கொண்டாடுகிறார்கள் நண்பர்களின் சந்திப்புகளை
தேநீர் தயாரிப்பிலும்
பரிமாறலிலும்
முதல் மிடறு உறிஞ்சலிலும்
ஒரு தியானம்
இருப்பதாய்
சீனத்து யாத்ரீகன் ஒருவன்
சதா உரைத்துக்கொண்டே யிருக்கிறான்
தேநீரையே விரும்பாத
ஒருவன் கைகளில்
மணந்துகொண்டிருக்கும்
காபிக் கோப்பையிலும்
இருக்கத்தான் செய்கிறது
ஆவி பறக்கும் ஒரு வாழ்வு
*****
தேநீர் # 2
ஒரு கோப்பைத் தேநீர்
அது ஒன்றுதான் கூலி
அந்தக் கோப்பையின் விளிம்பில் தான்
சாக்கடையைத் தூர் வாருவார்
பத்துத் தேங்காயை உரிப்பார்
பத்திருபது குடம் நீர் சேந்துவார்
சோர்வின் பொழுதில்
கொட்டாங்கச்சிக் கோப்பையில்
அருளப்படும் தேநீரை
குத்தவைத்து அமர்ந்து
குடிப்பார் மாரியண்ணன்
பிறகான மாலைப் பொழுதில்
குலுக்கலில் விழுந்த
எவர்சில்வர் டம்ளரில்
கருப்பட்டிக் காப்பி கலந்துவைத்துக்
காத்திருந்த இரவில்
மாரியண்ணன்
வெறிகொண்டு புணர்ந்த கதையை
செல்வியக்கா
இட்டேரியில் வள்ளியக்காவிடம்
கிசு கிசுத்த பூரிப்பில்
இட்டேரிக் கள்ளிகள் நூறு நூறாய்ப் பூத்தன
*****
தேநீர் # 3
என் தேநீரின்
நிறம்
வடிவம்
சுவை
திடம்
எல்லாமும் மாறிவிட்டிருக்கின்றன
இன்னும் மாறாதது
கை பட்டுவிடாமல்
நிரப்பக் காத்திருக்கும்
தனிக்குவளை தான்
*****
தேநீர் # 4
கொஞ்சம் கூடுதல் இனிப்புடன்
இரண்டே துளிகள்
எலுமிச்சைச் சாறு பிழிந்த
ஒரு குவளை கருந்தேநீர்
பின்
தாராளமாக எறிந்துவிடு
உன் கடைசிச் சொல்லை.
*****
வியாழன், 1 பிப்ரவரி, 2024
கனவின் இசைக்குறிப்பு - நூல்வெளியீட்டு விழா
கடந்த ஞாயிறு கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் எழுதிய கனவின் இசைக்குறிப்பு புத்தக அறிமுக விழா புதுக்கோட்டையில் நடந்தது..
முந்தைய நாள் வேலை, அடுத்த நாள் காலையில் கோவை இலக்கிய சந்திப்பில் சோலைமாயவன் நூல் அறிமுக விழா இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு காலையில் கிளம்பி, இரவு திரும்பிவிடுவது என திட்டமானது. நானும், சோலைமாயவன் இருவரும் மகிழுந்திலேயே சென்றுவிட்டோம்..
வரும் வழியில் நிறைய அழைப்புகள் வீதி நிகழ்வு என்றவுடம் எப்போதும் முதலில் நினைவுக்கு வரும் Devatha Tamil Geetha, தோழர் Kasthuri Rengan, தோழி Revathi Ram என ஒவ்வொருவராக அழைத்து சாப்பிட்டீர்களா, சாப்பிட இங்கு வாங்க என்று அழைத்தபடி இருந்தார்கள்..






