சனி, 13 ஜூன், 2020

மெய்யுறுதல் கவிதைத் தொகுப்பு

நேற்று அலுவலக வாசலுக்கே வந்து தனது மெய்யுறுதல் கவிதைத் தொகுப்பை அன்புடன் தந்துவிட்டுப் போனார் கவிஞர் பொன் இளவேனில்.

 290 பக்கங்கள் உள்ள கனமான தொகுப்பு. இந்தத் தனிமைக் காலம் தந்த  அனுபவங்களை தினம் தினம் பதிவு செய்த கொரானா கால கவிதைகள் இவை.

கிட்டதட்ட 166 கவிதைகள்... இரண்டு மாதங்களுக்குள் கிடைத்த தனிமையிலும் மன எழுச்சியிலும் எழுதிய கவிதைகள்.. இந்தக் காலத்தின் அரசியலை, சமகால நிகழ்வுகளை, தனிமைக்காலம் தரும்  அக உணர்வுகளை, இந்தக் காலகட்டத்தில் நடந்தேறிய கூத்துகளை என யாவற்றையும் தனக்கே உரித்தான நையாண்டியும் நயமும் கூடிய மொழியில் பதிவு செய்து இருக்கிறார் கவிஞர் பொன் இளவேனில்.

எழுத்தாளர் இளஞ்சேரல் எழுதி இருக்கும் நீண்ட அணிந்துரையும் அட்டகாசம். 

தொகுப்பின் ஒரு கவிதை இங்கு ...

கைவிடப்பட்டவர்கள்

நெடுஞ்சாலையில் யாருமில்லை
கைவிடப்பட்டவர்களின்
வழியாக அமைந்திருந்தது
கைகளிலும் தோள்களிலும்
குழந்தைகளையும் 
மூட்டை முடிச்சுகளையும் 
அள்ளிக் கொண்டு நடந்தார்கள்
எல்லா உயிர்களும்
பொருள்களான போதும் 
அவர்கள் நடந்தார்கள் 
யாரார் எங்கு எங்கு என்று 
யாருக்கும் புரியாமல் 
நடந்தார்கள் 
பசியின் கடவுள்கள் 
அழைத்த இடம் எதுவென்று
யாருக்கும் தெரியவில்லை தூரத்திலிருந்து கைவிட்டவர்களைப்  போல
அரசர்களைப் போல
கடவுள்களைப் போல 
பார்த்துக் கொண்டிருக்கிறோம்


வெளியீடு

அகத்துறவு, கோவை

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள

கவிஞர் பொன் இளவேனில்
96296 46320

நண்பர்கள் அவசியம் வாங்கி வாசியுங்கள்

4 கருத்துகள்:

  1. வணக்கம்
    தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வலியை பதிவு ெசெய்கிறது
    அருமையான அறிமுகம்

    பதிலளிநீக்கு
  3. பசியின் கடவுள்கள்
    அழைத்த இடம் எதுவென்று
    யாருக்கும் தெரியவில்லை .........நெகிழச்செய்யும் வரிகள் .

    பதிலளிநீக்கு