செவ்வாய், 20 அக்டோபர், 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இலவச அரசுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்

அன்புடையீர் ,

வணக்கம்.

பொள்ளாச்சி இலக்கியவட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கிய சந்திப்பை நடத்தி வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியப்பணிகள் மட்டுமல்லாது பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. அதன் மிக முக்கியமான அங்கமாக, பொள்ளாச்சியில் ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசுப்பணித் தேர்வுகளுக்கு ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கி இலவசமாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்பெடுக்கவும் அவர்களுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டிடவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், அரசுத் தேர்வுக்குத் தயாராக விரும்பும் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள்.

இது ஒரு கூட்டுமுயற்சியாக தங்கள் அனைவரின் ஒத்துழைப்போடுதான் சாத்தியமாகும். ஆகவே இம்முயற்சியின் முதல் கட்டமாக, இந்தச் செயல்பாட்டுக்குத் தங்களின் மேலான ஆலோசனைகள் உடனடியாக வரவேற்கப்படுகின்றன. கல்விமுறை,இடம்,பாடத்திட்டங்கள், தகவல்கள் என எல்லாத் தரப்பு ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்பலாம். மின்னஞ்சலில் அனுப்ப : ilakkiyavattampollachi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அலைபேசியிலும், அஞ்சல் வழியிலும் தங்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இந்த முயற்சியில் எங்களோடு கரம் கோர்க்க விரும்பும் ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி உபகரணங்கள் வழங்குவோர் ஆகியோரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

தங்கள் மேலான ஆதரவை வேண்டி ..

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாம்பாளையம்,
சமத்தூர் அஞ்சல்
பொள்ளாச்சி - 642123


பேச : 90955 07547 , 98422 75662

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக