புதன், 15 பிப்ரவரி, 2012

அம்மன் கோவில்
அர்ச்சனைப் பூவை
கூந்தல் கற்றையை
ஒதுக்கி நீ
சூடிக் கொள்ளும்
நேர்த்தியைப் பார்த்து
தன் கூந்தலை
ஒருமுறை சரி
செய்து கொள்கிறாள்
அம்மன்
யாரும் அறிந்திராவண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக