திங்கள், 10 டிசம்பர், 2012

கருந்துளை - சிற்றிதழ்

நண்பர்களின் உந்துதலாலும், உதவியாலும், கருந்துளை வெளியாகி விட்டது. நிறைய இடங்களுக்கு சென்று சேர்ந்து விட்டது. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆதரவுக் குரல்களும், அனுதாபக் குரல்களும், பாராட்டுக்களுமாக வந்து கொண்டிருக்கிறது.

தீராத அலுவல் வேலைகளினாலும், தேர்வுகள் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்ததாலும் முழு வீச்சாக இதழ் பணிகளில் இயங்க முடியாத போதும் நண்பர்ௐகளின் உதவியால் இதழ் முழுமையாக வந்திருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நண்பர்கள் தொடர்ந்து நன்கொடை, சந்தா என்று இப்போதே தங்களது அன்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

முதல் இதழ் சற்று தாமதமாக வந்துள்ளது. நண்பர்கள்,விமர்சகர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதழ் வேண்டுவோர் எனது எண் 9842275662-ஐ தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த இதழுக்கான வேலைகள் இப்போது துவங்கி விட்டன. நண்பர்கள் தங்கள் படைப்புகளை உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதழ் முகவரி : கருந்துளை,எண்-8,ராசா மில் சாலை,பொள்ளாச்சி

மின்னஞ்சல் : karundhulai@gmail.com

அன்பு கூர்ந்து நண்பர்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிற்றிதழ் நடத்துவதின் அவசியங்களையும், அதை தொடர்ந்து இயக்குவதின் சிரமங்களையும் உணர்ந்து நீங்கள் எங்கள் இலக்கியப் பணி தொடர வாழ்த்தி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

 -  இரா.பூபாலன்








வெள்ளி, 9 நவம்பர், 2012

தீபாவளி

இந்த தீபாவளி
மிகுந்த சத்தங்களுடனும்
ஆரவாரங்களுடனும்
அதீத வலியுடனுமே
வந்திருக்கிறது ...

வழக்கமாக
வெளியில் ஒலிக்கும்
சத்தங்கள்
சந்தோஷம் தரும்.

இம்முறை
அணுகுண்டுகளும்
ஆயிரம் வாலாக்களும்
வெடித்துக் கொண்டிருப்பது
மனதுக்குள்.

சிவகாசியில் வெடி விபத்து
ஈழத்துக் கண்ணீர்
என எல்லாம் சேர்ந்து
நெஞ்சை அழுத்த
எதைக் கொண்டாடுவது..?

செவ்வாய், 2 அக்டோபர், 2012

கருந்துளை - சிற்றிதழ்


வணக்கம்,
 
 நண்பர்களுடன் இணைந்து கருந்துளை என்ற சிற்றிதழ் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அறிமுக அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளேன்.
 
முதல் இதழ் உருவாகி வருகிறது. கவிதைகள்,கட்டுரைகள்,விமர்சனங்கள் என உங்கள் படைப்புகளை உடனடியாக கொடுக்கப் பட்டுள்ள முகவரிக்கோ அல்லது கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பவும்.
 
உங்கள் தொடர்பு எண்,முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிடவும்.
மின்னஞல் முகவரி : karundhulai@gmail.com