திங்கள், 10 டிசம்பர், 2012

கருந்துளை - சிற்றிதழ்

நண்பர்களின் உந்துதலாலும், உதவியாலும், கருந்துளை வெளியாகி விட்டது. நிறைய இடங்களுக்கு சென்று சேர்ந்து விட்டது. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆதரவுக் குரல்களும், அனுதாபக் குரல்களும், பாராட்டுக்களுமாக வந்து கொண்டிருக்கிறது.

தீராத அலுவல் வேலைகளினாலும், தேர்வுகள் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்ததாலும் முழு வீச்சாக இதழ் பணிகளில் இயங்க முடியாத போதும் நண்பர்ௐகளின் உதவியால் இதழ் முழுமையாக வந்திருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நண்பர்கள் தொடர்ந்து நன்கொடை, சந்தா என்று இப்போதே தங்களது அன்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

முதல் இதழ் சற்று தாமதமாக வந்துள்ளது. நண்பர்கள்,விமர்சகர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதழ் வேண்டுவோர் எனது எண் 9842275662-ஐ தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த இதழுக்கான வேலைகள் இப்போது துவங்கி விட்டன. நண்பர்கள் தங்கள் படைப்புகளை உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதழ் முகவரி : கருந்துளை,எண்-8,ராசா மில் சாலை,பொள்ளாச்சி

மின்னஞ்சல் : karundhulai@gmail.com

அன்பு கூர்ந்து நண்பர்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிற்றிதழ் நடத்துவதின் அவசியங்களையும், அதை தொடர்ந்து இயக்குவதின் சிரமங்களையும் உணர்ந்து நீங்கள் எங்கள் இலக்கியப் பணி தொடர வாழ்த்தி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

 -  இரா.பூபாலன்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக