வியாழன், 5 ஏப்ரல், 2012

சிரிக்க...

 
 
நட்புடன்,
இரா.பூபாலன்
 
செல்பேசி :9842275662
 
 
 

வெள்ளி, 30 மார்ச், 2012

கவன ஈர்ப்பு

 

எத்தனை முக்கியமான

வேலையில்

மும்முரமாக

இருந்தாலும்

நிமிர்ந்து பார்க்க

வைத்து விடுகிறது

கடந்து போகும்

கொலுசுச் சத்தம்


புதன், 21 மார்ச், 2012

என் புன்னகை


என் கவிதைகளில்
நிரம்பி வழிகிற
கண்ணீர் எனதே எனது.
 
என் கவிதைகளில்
எப்போதாவது
கிளையும்
புன்னகை நிச்சயம்
உனது.
 

திங்கள், 12 மார்ச், 2012

ரத்த தேசம்


 
Channel -4 வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்தீர்களா நண்பர்களே.
நெஞ்சு பதைபதைத்து கண்கள் முட்டவில்லையா..?
நமது இனம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தாங்கும்..?
நமது சகோதர சகோதரிகள் வன்கொடுமைக்கு ஆளாவதையும்,
சிதறுண்டு சாவதையும் எப்படி சகிப்பது..?
 
If you want see it again Visit :

http://thaaitamil.com/?p=11947

எதுவுமே செய்யாத எல்லாரையும் காலம் கவனித்துக்
கொண்டே இருக்கிறது. நாளைய வரலாற்றில் நம்
பெயர்கள் துரோகிகளாகவும்,கையாலாகாதவர்களாகவும்
பதியப்படும்.

புத்த தேசம்
ஆனது
ரத்த தேசம்.


புன்னகை - கவிதை இதழில் வெளியான எனது கவிதை:
 
 
தாய்ப்பால் பற்றிய - ஒரு
கவிதையை எழுத
நினைக்கையில் அங்கு
அறுத்தெறியப் படுகின்றன
சில மார்பகங்கள்...
குழந்தையின் புன்னகையை
கவிதைப் படுத்த நினைக்கையில்
அங்கே புதைக்கப்படுகின்றன
பல குழந்தைகளின் கடைசிப்
புன்னகைகள்...
பூக்களை எழுதலாம் என்றால்
சாம்பல் காடுகளே
எஞ்சியிருக்கின்றன..
எதைப்பற்றியும்
எழுதவியலாமல் கடைசியில்
கடவுளைப் பற்றி எழுத
நினைக்கையில் அங்கு
குண்டு சத்தங்களுக்கு பயந்து
கருவறையை
காலி செய்துகொண்டு
ஒடி விட்டாராம் கடவுள்....
கடவுளே இல்லாத ஊரில்
யாரிருக்கிறார் இப்போது..?