வெள்ளி, 13 ஜனவரி, 2017

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் நம் பண்பாட்டின் மிச்சங்கள் மட்டுமல்ல, அவை நம்மை, நம் உறவை , நம் நட்பை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் கண்ணி

பல்வேறு பிரிவினைக் காரணிகளால் நாம் சிதறுண்டு கிடந்தாலும், நம்மை அரூபமாய் ஒரு உணர்வு இணைத்துக்கொண்டபடியே இருக்க வேண்டும். 
அது மொழியுணர்வு, இனவுணர்வு என எதுவாகினும் அதன் அடிநாதம் அன்பாய் இருத்தல் வேண்டும்.

நாம் அகத்திலும் புறத்திலும் சேர்த்துக்கொண்டே இருக்கும் அழுக்குகளும், தேவையற்ற குப்பைகளையும் கழித்து, நல்லனவற்றை, புதியனவற்றை வரவேற்க வேண்டும்

நமது ஆதித் தொழிலான உழவு தான் இன்று வரைக்கும் நமது தட்டில் உணவை நிறைக்கும் தொழில். உழவுத்தொழிலைப் போற்ற வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல், நாம் ஒருவரை ஒருவர் காண வேண்டும். புறக்கண்களால் ஆகாவிடினும் அகக்கண்களால் கண்டு அன்பு செய்ய வேண்டும். ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும்.

இத்தனைக்குமான ஒரு பண்டிகை தான் பொங்கல்.. இந்நன்னாளில் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கலைப் போல மகிழ்ச்சியும் குதூகலமும்
பொங்கிட மனம் நிறைந்த வாழ்த்துகள்/....



3 கருத்துகள்:

  1. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. இனிய பொங்கல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு