வியாழன், 23 ஏப்ரல், 2020

ஊரடங்கு வாசிப்பு

 உலக புத்தக தின வாழ்த்துகள்

புத்தகங்கள் இல்லாத பால்யம், புத்தகங்கள் இல்லாத பதின் பருவம், புத்தகங்கள் இல்லாத தனிமை இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க இயலவில்லை. புத்தகங்கள் இல்லாமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பேன் என்று சொல்ல முடியவில்லை. புத்தகங்களால் நானாகியிருக்கிறேன் என்று மட்டும் நம்புகிறேன்.

2016 வரைக்கும் வாழ்க்கை வண்ணமயமாக இருந்தது. 2017 மார்ச்சில் அப்பா தவறியதும் அது சுருங்கிப் பொலிவிழந்தது போலாகிவிட்டது. அப்பாவின் வேலைகளையும் குடும்ப வேலைகளையும் பார்த்துக் கொள்வது, அப்பாவின் இழப்பில் இழந்த மனதை மீட்டெடுக்க முடியாதது என பழைய வாசிப்பு , எழுத்து எதையும் தொட முடியவில்லை. நேரமும் சுத்தமாக அமைவதில்லை. இந்த ஊரடங்கில் ஒரு நாளும் வெளியில் போகவில்லை. வீடு தான் ; அறை தான் உலகம். தினம் ஒரு திரைப்படம், தினம் ஒரு புத்தகம், விளையாட்டு, என முழு நேரமும் எனதாக இருந்தது.

வாசிக்காமல் வைத்திருந்த, பாதியில் நிறுத்தி வைத்திருந்த புத்தகங்களில் பலவற்றை வாசித்துவிட வாய்ப்புக் கிடைத்தது.
கொரானாவுக்கு நன்றி. பல புத்தகங்களை வாசித்தேன். சில புத்தகங்களைப் பற்றி எழுதி இதழ்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நிறைய கவிதைத் தொகுப்புகள், தன் வரலாறு, சிறுகதைகள், இரு நாவல்கள், சுய முன்னேற்றக் கட்டுரைகள் என கலந்து கட்டி வாசித்தேன்.

தமிழில் சில பதிப்பகங்களைத் தவிர்த்து பெரும்பாலான பதிப்பகங்கள் தரமான தாளில், தரமான அச்சில் புத்தகங்களைத் தருவதில்லை.

பல பதிப்பகங்கள் எழுத்துப் பிழைகளை, சந்திப் பிழைகளைக் கவனத்தில் கொள்ளாமல் கொல்கின்றன. இது வரலாற்றுப் பிழை. பிழைகளுடன் ஒரு படைப்பை வாசிக்கும் போது அதன் உன்னதத்தை உணர்ந்து கொள்ள மனம் ஒட்டாமல் ஒரு வித சலிப்பு வந்து விடுகிறது.

இந்த ஒரு மாத காலமும் நான் வாசித்தவற்றில் சில புத்தகங்களை இங்கு பகிர்கிறேன். விரைவில் இவை குறித்த அறிமுகக் குறிப்புகளையும் எழுதுகிறேன்

நாவல் :

1. வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
2. கொண்டல் - ஷக்தி ( மீள்  வாசிப்பு )
3. வேள்பாரி - சு.வெங்கடேசன் ( வாசிப்பில் )

சிறுகதை 

1, சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை - அ.கரீம்
2.ராக்கெட் தாதா - ஜி.கார்ல் மார்க்ஸ்

கட்டுரைகள்

1. நீ இன்றி அமையாது உலகு - முகில்
2. உணவு சரித்திரம் - முகில்
3. ஐயா (எ) 95 வயது குழந்தை - வடிவரசு
4. அகம் புறம் - வண்ணதாசன்

சிறுவர் கதைகள் 

1. முட்டாளின் மூன்று தலைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்

கவிதைகள்

1. ஒளிர் விதை - கனிமொழி.ஜி
2. அந்த வட்டத்தை யாராவது சமாதானப் படுத்துங்கள் - கார்த்திக் திலகன்
3. சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் - ஜெ.பிரான்சிஸ் கிருபா
4. கரப்பானியம் - வே.நி.சூர்யா
5. நெடுபனையில் தொங்கும் கூடுகள் - விஜயபாரதி
6. நீர்மையின் சாம்பல் சித்திரங்கள் - முருக தீட்சண்யா
7. எண் 7 போல் வளைபவர்கள் - மொழிபெயர்ப்பு : அனுராதா ஆனந்த்
8. மாயப்பட்சி - பா.ராஜா
9. வைன் என்பது குறியீடல்ல - தேவசீமா
10. நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் - இசை
11. பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - இளங்கோ கிருஷ்ணன்
12. டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு - சம்யுக்த மாயா
13. சலூனில் காத்திருக்கிறான் சிந்துபாத் - கணேச குமாரன்
14. யட்சியின் வனப்பாடல்கள் - மனுஷி
15. கருநீல முக்காடிட்ட புகைப்படம் - மனுஷி
16. அறிந்திடாத இரவு - ஜீனத்
17. பிள்ளைத் தானியம் - ஜெயாபுதீன்
18. தபுதாராவின் புன்னகை - தாமரை பாரதி
19. மழை நிரம்பிய கால்சட்டைப் பை - மகேந்திரன் கோ
20. கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - சேலம் ராஜா
21.அசைந்தபடியே இருக்கிறது தூண்டில் - இரா.மதிபாலா
22. கடவுளின் ஆண்குறி - சாமான்யன்
23. வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி - ராஜேஷ் வைரபாண்டியன்
24. அக்காளின் எலும்புகள் - வெய்யில்
25. கல் முதலை ஆமைகள் - ஷங்கர் ராமசுப்ரமணியன்
26. தாழம்பூ - பொன்முகலி
27. பிடிமண் - முத்துராசா குமார்
28. அரோரா - சாகிப்கிரான்
29. ஈஸ்ட்ரோஜன் - ஜான்ஸி ராணி


இவை தற்போது வரை வாசித்த பட்டியல். இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன. கூடும். மேலும், நான் வாசித்தவற்றில் பிடித்தமான தொகுப்புகளை மட்டுமே பட்டியலில் சேர்த்துள்ளேன்.

இந்த எழுத்தாளர்களுக்கு என் நன்றியும் அன்பும். இந்தத் தனித்த நாட்களை அர்த்தமாக்கித் தந்தீர்கள்.

4 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் மேலும் உங்களின் விருப்பங்கள் போலவே நேரங்கள் கடக்கட்டும் சகோதரர் அவர்களே... தாங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை முன்மாதிரியாகவே நான் எப்போதும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்... நன்றி.எழுத்துப் பிழைகளை நானும் தவிர்க்கவே விரும்புகிறேன்.🔥💐🤝

    பதிலளிநீக்கு
  2. ஆகா
    வாசிப்பு வேட்டைேயே நிகழ்ந்திருக்கிறது
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. தந்தையார் மறைவு வருத்தம் தந்தது

    பதிலளிநீக்கு