வியாழன், 11 ஜூலை, 2019

மணல் வீடு சிற்றிதழ்




ஒரு நல்ல திரைப்படத்தைப் பணம் கொடுத்து திரையரங்கம் சென்று பார்ப்பது போல, ஒரு நல்ல புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பது போல அறம் மிகுந்த செயல் ஒரு சிற்றிதழைப் பணம் கொடுத்து வாங்கி வாசிப்பது.

மணல் வீடு சிற்றிதழ் எழுத்தாளர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களால் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ். சீரான கால இடைவெளி எல்லாம் இல்லை. அதிகபட்சம் அரையாண்டு இடைவெளிக்குள் இதழ் வந்துவிடும்.

இதழ் வடிவம், உள்ளடக்கம், பக்கங்கள் என அத்துணை விஷயங்களிலும் கனமான இதழாக இருக்கும். பெரிய வடிவத்தில், தடிமனான பக்கங்களுடன், மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுடன் வெளி வருகிறது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், எதிர் இலக்கியங்கள், நேர்காணல்கள், ஓவியங்கள் என மணல்வீடு ஒவ்வொரு இதழும் பல காலம் பாதுகாத்து வைத்துப் படிக்க வேண்டிய தகுதியுடைய ஓர் இதழ் தான்.

எந்த சமரசமும் இல்லாமல் படைப்புகளில், படைப்புகளின் தேர்வுகளில் இயங்கக் கூடியவர் மு.ஹரிகிருஷ்ணன். மாற்று இலக்கியத்தையும், தொல்கலைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்.

தற்போது இதழ் எண் 37-38 வெளிவந்துள்ளது. 192 பக்கங்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழியாக்கம்,விமர்சனம்,ஓவியங்கள் என அற்புதமாக வந்துள்ளது. வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்.






இந்த இதழில் பெரு.விஷ்ணுகுமார்,பெருந்தேவி,ஷா அ, யாழ் அதியன் , கறுத்தடையான்,அனார், றாம் சந்தோஷ், சுதந்திரவல்லி கவிதைகளை வாசித்தேன். இன்னும் சிறுகதைகள், மொழி பெயர்ப்புகள், கட்டுரைகள் இருக்கின்றன.... 192 பக்கங்களில் A4 அளவில் புத்தகம்  என இதழ் கனக்கிறது..


மணல்வீடு இதழ் வேண்டுவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் சந்தா தொகையைக் கட்டி விட்டு அதன் ஆசிரியருக்கு தகவல் சொல்லிவிட்டு முகவரியைத் தந்துவிட்டால் இதழ் உங்கள் முகவரி தேடி வந்துவிடும். ஓர் ஆண்டுக்கான சந்தா ரூபாய் ஐநூறு மட்டும் தான் ...

ஒரு நல்ல சிற்றிதழை வாசிக்க, ஒரு நல்ல சிற்றிதழை ஊக்குவிக்க அவசியம் சந்தா செலுத்துங்கள்

முகவரி :

மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர் - மணல்வீடு சிற்றிதழ்
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டுர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
அலைபேசி - 98946 05371
மின்னஞ்சல் - manalveedu@gmail.com
manalveeduhari@gmail.com



சந்தா செலுத்த வங்கி விவரம்

M. Harikrishnan
Indian Bank, Mecheri

A/C No : 534323956
IFSC : IDIB000M025



2 கருத்துகள்:

  1. வாழ்த்துகள். நானும் சிறுகதை கவிதை எழுத விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய படைப்புகளையும் அனுப்புகிறேன்.விரைவில் சந்தாவையும் அனுப்பிவைக்கிறேன்

    பதிலளிநீக்கு