திங்கள், 27 பிப்ரவரி, 2017

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளர் விருது

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் முப்பெரும் விழா தேனியில் கடந்த 25-02-2017 அன்று நடைபெற்றது. எனக்கு 2016ஆம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. மேடை அமைப்புக்கும் தோழர் விசாகனுக்கும் மனம் நிறைந்த நன்றி.

உடன் விருது பெற்ற ஆளுமைகளுக்கும் நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...


எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்களிடமிருந்து விருது பெற்ற போது..
அருகில் கவிஞர் நறுமுகைதேவி மற்றும் கவிஞர் சுகிர்தராணி




நிகழ்வில் நூல்கள் வெளியிடப்பட்டன, நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, தலைமை உரை இருந்தது, சிறப்புரை இருந்தது, குறும்படம் திரையிடப்பட்டது, ஐம்பது பேர்களுக்கும் மேலாக விருதுகள் வழங்கப்பட்டன, வழக்கம் போல கொஞ்சம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது ஆனாலும் குறித்த நேரத்தில் நிகழ்வு முடிந்தது அவ்வளவு ஆச்சர்யம்.

நிகழ்வில் இதுவரை சந்தித்திராத, சந்தித்து பல நாட்கள் ஆன நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததே பெருமகிழ்வு.

தோழர் விசாகனின் அர்ப்பணிப்பான உழைப்பு பாராட்டுதலுக்குரியது. தமிழகம் முழுக்க இருந்து சிறந்த படைப்பாளர்களை, ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து விருது அளித்திருக்கிறார். நிகழ்ச்சியை மிகச்சிறந்த முறையில் ஒருங்கிணைத்திருக்கிறார்.

தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பான கூட்டமாக இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறார். அவரது பணி சிறக்க வாழ்த்துகள் ..





5 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்
    தொடரட்டும்
    தங்கள் பணி

    பதிலளிநீக்கு
  2. ஆன்லைன் மூலமாக எந்த முதலீடும் செய்யாமல் சம்பாதிப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=YMGgs45XGyY

    பதிலளிநீக்கு
  3. அந்த காலம் முதல் இன்று வரை நமக்கு பிடித்த பாடல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=0lgJhG36peg

    பதிலளிநீக்கு
  4. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    பதிலளிநீக்கு