புதன், 2 டிசம்பர், 2015

சென்னை , கடலூர் நண்பர்களின் துயர் துடைக்கக் கரம் சேர்ப்போம்

வணக்கம் நண்பர்களே.
சென்னை கடலூர் மாவட்டங்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. நமது வாழ்நாளில் நாம் பார்த்திராத பெருமழை. மக்கள் வீடிழந்து, உடமைகள் இழந்து, வாழ்விழந்து நமது உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் நம் சகோதரர்களுக்காக கரம் சேர்க்க வேண்டிய நேரம் இது. பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பாக அத்தியாவசியப் பொருட்களை அனுப்பும் பணியை முன்னெடுக்கிறோம். வாய்ப்புள்ள அனைத்து நல்ல உள்ளங்களும் முடிந்த வரை பொருளாக வாங்கிக் கொடுங்கள். முடியாதவர்கள் பணமாகவும் தரலாம். நாளை 03.12.15 அன்று நமது முதற்கட்ட உதவிப் பொருட்களை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். தொடர்பு கொள்ளுங்கள்.
இரா.பூபாலன் 98422 75662
.அம்சப்ரியா 90955 07547
பொருளாகத் தருபவர்கள், கீழ்க்கண்ட பொருட்களைத் தரலாம். அத்தியாவசியப் பொருட்கள் வேறு விடுபட்டிருப்பின் தெரிவிக்கவும்
  • போர்வைகள்
  • பாய்
  • துண்டு
  • உடைகள் ( அனைத்து வகையிலும் )
  • பற்பசை, ப்ரஷ்
  • சோப்பு மற்றும் ஷாம்பு வகைகள்
  • மண்ணெண்ணெய் அடுப்புகள்
  • மருத்துவ உபகரணங்கள்
    உணவு வகைகள் :
  • ரொட்டி
  • பிஸ்கட் வகைகள்
  • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்
  • பால் பவுடர்கள், பால் புட்டிகள்
பணமாக அனுப்புபவர்கள் கீழ்க்காணும் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். அனுப்பிவிட்டு விவரத்தைத் தெரிவிக்கவும்
R Boobalakrishnamoorthy
Account number 615201510464
ICICI bank
Ifsc ICIC0006152

Ramnagar branch

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக