திங்கள், 2 மார்ச், 2015

இன்னும் வளரனும் பாப்பா ...

வழக்கமாகவே வார இறுதி நாட்களில் பாரதியின் சிறப்பு வகுப்புகளுக்கு நாங்கள் கிளம்பினாலே குஷி தான்.

இந்தவாரம் சனிக்கிழமை விடுமுறை மேலும் வேறு வேலை இல்லாததால் கொஞ்சம் முன்னதாகவே சென்றுவிட்டோம். வழக்கம் போலவே கெளரி கிருஷ்ணா போகலாம் என்றாள். அவளுக்கு கேக், எனக்கு எலுமிச்சை ஜூஸ்.

அப்போது, டிஸ்யூ பேப்பர் எடுத்து கிழிச்சு கிழிச்சு ஒரு பாப்பா விளையாடினாள். அவளது அக்காவோ நிறைய டிஸ்யூ பேப்பரை கசக்கி டேபிள் நிறைய நிறைச்சு வெச்சிருந்தா.

பாரதியின் கடமையுணர்வு வேலை செய்ய ஆரம்பித்தது.

"அப்பா, நீங்க தான சொன்னீங்க, 3000 பேப்பர் செய்ய ஒரு மரத்த வெட்டுவாங்க அதுனால பேப்பர் வேஸ்ட் பண்ண கூடாதுனு “.

" ஆமாம் "

" அங்க பாருங்க எத்தன பேப்பர் வேஸ்ட் ஆகுது னு. ஒரு ஐடியா பா, வரவங்களுக்கெல்லாம் ஒரு கர்சீப் கொடுத்துடலாம் அவங்க துடைச்சிட்டு திருப்பி தரனும், ஹோட்டல் காரங்க அத துவைச்சு மறுபடி யூஸ் பண்ணனும். அப்ப, பேப்பர் வேஸ்ட் ஆகாது தான..? “ ( ஓட்டல்காரங்கோவ் நோட் பண்ணுங்கோவ் )

" அட சூப்பர் பாப்பா, இத போய் அந்த மேனேஜர் அங்கிள் கிட்டயும், சப்ளையர் அங்கிள் கிட்டயும் சொல்லிட்டு வா"

" அப்பா இன்னொன்னும் சொல்லனும், எலுமிச்சை ஜூஸ் னா, அம்மா போடற மாதிரி இனிப்பா இருக்கனும் தான, இங்க என்ன கசப்பா இருக்கு, நீங்க குடிச்சுட்டிங்க, குழந்தைங்க எப்படி குடிப்பாங்க ? “

" கரெக்டு டா. இதையும் போய் சொல்லிட்டு வா "

" போங்கப்பா, நீங்களே சொல்லுங்க "

" தைரியமா போய் சொல்லுடா, நல்லது தானே சொல்ற "

" கிளம்பினாள், வேக வேகமாக மேனேஜர் டேபிள் வரை நடந்து விட்டு சிரித்துக் கொண்டே ஒரு சுத்து சுத்தி வந்தாள் "

" ஏண்டா சொல்லலயா "

" போங்கப்பா " என்று சிரித்தாள்.

" போய் சொல்லிட்டு வா “. மீண்டும் போய் விட்டு, சிரித்துக் கொண்டே ஓடி வந்து விட்டாள்.

சப்ளையர் எங்களைப்பார்த்து வந்தார். “ என்ன சார் வேணும் "

இல்லங்க, பாப்பா எதோ உங்க கிட்ட சொல்லனுமாமா "

சொல்லு பாப்பா "

அங்கிள் , ஒன்னும் இல்ல நீங்க போங்க " சிரித்தபடியே கிளம்பி விட்டாள்.


இன்னும் வளரனும் பாப்பா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக