திங்கள், 2 மார்ச், 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் அடுத்த பரிணாமம்

கொஞ்சம் இடைவெளியாகிவிட்டது. புத்தக வெளியீட்டு வேலைகள் அப்புறம் சோம்பேறித்தனம்....

பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடாக எனது மற்றும் நண்பர்களின் கீழ்க்கண்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

எனது கவிதைத் தொகுப்பு " பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு '

கவிஞர் க.அம்சப்ரியாவின் " என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது " - கவிதைத் தொகுப்பு.

கவிஞர் வைகறையின் " ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் " - கவிதைத் தொகுப்பு

கவிஞர் சோலைமாயவனின் " வனத்தில் மிதக்கும் இசை " கவிதைத் தொகுப்பு

கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் " முதற்படி " - கவிதைத் தொகுப்பு

நிலாரசிகனின் " ஜூலி யட்சி " - சிறுகதைத் தொகுப்பு.

ஆறு புத்தகங்களையும் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் 11.01.2015 அன்று வெளியிட்டோம், அடுத்த வாரமே 18.01.2015 அன்று பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் வெளியீடு.

வெளியீட்டு விழாவுக்குள் புத்தகங்களை அச்சகத்திலிருந்து கொண்டுவர ஜேம்ஸ்பாண்ட் சாகசங்களெல்லாம் செய்ய வேண்டி இருந்தது தனிக்கதை ஆனாலும் நல்ல அனுபவம்.

இனி ஒவ்வொரு வருடமும் குறைந்தது இருபது புத்தகங்களாவது பொள்ளாச்சி இலக்கியவட்ட வெளியீடாகக் கொண்டு வர வேண்டும் என்பது இலக்கு.

பொள்ளாச்சி இலக்கியவட்ட வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்

கோவையில்

விஜயா பதிப்பகம், டவுன் ஹால்
கீதம் பதிப்பகம் உக்கடம் பேருந்து நிலையம்

பொள்ளாச்சி

ஆசியன் புத்தகக் கடை, மகாலிங்கபுரம்
அட்சயா அச்சகம் ( சுதர்சனம் வார இதழ் ), பேருந்து நிலையம் அருகில்
அன்பு புத்தகக் கடை , பேருந்து நிலையம்

சென்னையில்

அகநாழிகை புத்தக அங்காடி
டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர்
ஓலைச்சுவடி பதிப்பகம், அண்ணா சாலை
வீ கேன் ஷாப்பிங்

ஆன் லைனில் வாங்க







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக