திங்கள், 26 மார்ச், 2018

படைப்பாளர்களுக்குப் பாராட்டு விழா

பொள்ளாச்சியில் 25.03.18 ஞாயிறு அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது.

நிகழ்வில் பொள்ளாச்சியில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு நூல் வெளியிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பொள்ளாச்சியில் 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த நூல்கள் குறித்த ஆய்வுரையை எழுத்தாளர் சூர்யா அவர்கள் பேசினார்.

எழுத்தாளர் கரீம், கவிஞர் க.அம்சப்ரியா, திரு.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக நூல்கள் வெளியிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

நான் நினைவுப்பரிசைப் பெற்ற போது ...



பொள்ளாச்சி த.மு.எ.க.ச வின் தலைவராக எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களும் , செயலாளராக சூர்யபிரகாஷ் அவர்களும், பொருளாளராக கவிஞர் கீதாப்ரகாஷ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்....

ஒவ்வொரு ஊருக்கும், கிராமங்களுக்கும் , நகரங்களுக்கும் இலக்கிய அமைப்புகளின் தேவை அதிக அளவில் இருக்கிறது... தொடர்ந்து அவை செயல்படுவதன் மூலமாக, வாசிப்பையும் எழுத்தையும் பேச்சையும் இவற்றினூடாக அறத்தையும் மனித மனங்களில் வேரூன்றச் செய்யலாம்...


5 கருத்துகள்: