திங்கள், 4 டிசம்பர், 2017

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் விருது

நண்பர்களுக்கு வணக்கம்,

இன்னுமோர் மகிழ்வான செய்தி

தேனியில், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் விசாகன்.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு, படைப்பாளர்களுக்கு, இலக்கிய செயல்பாட்டாளர்களுக்கு என பல்வேறு விருதுகளை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கி  கெளவரவித்து வருகிறது. சென்ற ஆண்டு எனக்கு வளரும் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு சிறந்த இலக்கிய செயல்பாட்டாளருக்கான எச்.ஜி.ரசூல் நினைவு விருது எனக்கு வழங்கப்படுகிறது.

அதைவிடவும் மகிழச் செய்வது பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் கிடைக்கப்போகும் விருதுகள் பற்றிய அறிவிப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் கவிஞர் க.அம்சப்ரியா மற்றும் கவிஞர் சோலைமாயவன் . கவிஞர் ஆன்மன், கவிஞர் யாழ் தண்விகா ஆகியோருக்கு அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது வழங்கப்படுகிறது.

கவிஞர் ஜெ.நிஷாந்தினி, கவிஞர் ச.ப்ரியா மற்றும் கவிஞர் வே.கோகிலா ஆகியோருக்கு வளரும் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

மக்கள் கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருது 
கவிஞர் செங்கவின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விருதுப்பட்டியலில் 118 படைப்பாளர்கள் இருக்கிறார்கள். பேராச்சர்யமும் பேரானந்தமுமாக இருக்கிறது. இத்துணை படைப்பாளர்களையும் தேடிப்பிடித்து அவர்களைச் சிறப்பு செய்வது மிகப்பெரிய மகத்தான காரியம். விசாகனுக்கும் , தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.

விருது பெறுகின்ற அத்துணை படைப்பாளர்களும் மனதுக்கு நெருங்கிய நண்பர்கள், மதிக்கும் ஆளுமைகள். இவர்கள் அனைவரையும் விருது விழாவில் ஒருங்கே சந்திக்க வாய்த்தாலே அது பெரிய கொண்டாட்டம் தான். 

விருது பெறுகிற நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தேர்வுக்குழுவினருக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி...






8 கருத்துகள்:

  1. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
    மென்மேலும் உங்கள் புகழ் ஓங்குக.

    இவ்வண்ணம்
    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு