ஞாயிறு, 10 டிசம்பர், 2017

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகாகவி

அன்பு செய்தல்

இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!


மனிதர்க்குத் தொழில் இங்கு அன்பு செய்தல் மட்டும் தான் எனச் சொன்ன பாரதியின் பிறந்தநாள் இன்று.

ஒவ்வொருவருக்கும் சக மனிதர்களின் மீதும் சக உயிரினங்களின் மீதும் அன்பு பெருகுமாயின் இந்த உலகம் எத்துணை அழகாய்ச் சுழலும் ? 

சக மனிதனின் மீது நேர்மையான அன்பு நீடிக்குமானால் சமுதாயத்தின் எந்தப் பிறழ்வுகளும் , கொடுமைகளும் , இன்னல்களும், தீமைகளும் சாத்தியமற்றுப் போய்விடும்.

ஆகவே தான் அன்பு செய்தால் போதுமென்றான் பாரதி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகாகவி ...

அன்பைத்தான் படைப்புகளின் வழியும் உரையாடல்களின் வழியும் செயல்பாடுகளின் வழியும் தொடர்ந்து தேடிக்கொண்டும் விதைத்துக்கொண்டுமிருக்கிறோம் ..





1 கருத்து: