புதன், 13 செப்டம்பர், 2017

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் விருது 2016

நண்பர்களுக்கு வணக்கம்

மிக்க மகிழ்வான செய்தி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் - செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருதுக்கு எனது மூன்றாவது தொகுப்பான ஆதி முகத்தின் காலப்பிரதி கவிதை நூல் தேர்வாகியிருக்கிறது.

இந்தத் தருணம் மனநிறைவாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அது இரட்டிப்பாகிறது.

ஆதிமுகத்தின் காலப்பிரதி எனது மூன்றாவது கவிதை நூல். இந்த நூலுக்கு இது மூன்றாவது விருது.

முதலிரண்டு விருதுகள் :
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கும் 2016ஆம் ஆண்டுக்கான் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது 2016 
  • நாங்கள் இலக்கியகம் வழங்கும் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான இரண்டாம் பரிசு

விருது வழங்கும் விழா 16.09.2017 அன்று நாகர் கோவிலில் - கிருஷ்ணன் கோவில், கே.முத்தையா திடலில் திறந்த வெளி அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அன்று காலை முதல் விருதுபெற்ற நூல்களின் அறிமுக நிகழ்வுகள் முழுநாளும் நடைபெற இருக்கின்றன. இத்துடன் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.
வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வருக








சிறந்த நாவலுக்கான விருது பெறும் தோழர் இரா. முருகவேள்
சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது பெறும்
தோழர் அ.கரீம் Kareem Aak
சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெறும்
தோழர் அப்பணசாமி Appanasamy Apps
மற்றும் உடன் விருதுபெறும் எழுத்தாளர்கள் , சி. லஷ்மணன்- கோ.ரகுபதி,முனைவர் கா.அய்யப்பன்,
உதயசங்கர், ஆர்.பாலகிருஷ்ணன் , இரா.வேங்கடாசலபதி அனைவர்க்கும் என் மனம் நிறைந்த
நல்வாழ்த்துகள்.

உடன் இருக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி.

அன்பு செய்வோம்.

24 கருத்துகள்:

  1. நெஞ்சம் நிறைந்த வாழத்து பூபாலன்
    வெற்றிகள குவியட்டும், கவிதைப் பயணம் தொடரட்டும்,

    பதிலளிநீக்கு
  2. மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு