ஞாயிறு, 28 மே, 2017

மேலும் ஒரு விருது

நண்பர்களுக்கு வணக்கம்,

ஒரு மகிழ்ச்சியான செய்திப் பகிர்வு ...

எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பான ஆதிமுகத்தின் காலப்பிரதி நூலுக்கு 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்கான இரண்டாம் பரிசை அறிவித்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் நாங்கள் இலக்கியகம் அமைப்பு.

இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் கலை இலக்கிய சிந்தனையாளர் மன்றமும், மேல்சாத்தம்பூர்  கருப்பசாமி நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பரிசுப் போட்டியில் வென்றிருப்பதில் மகிழ்ச்சி.

எனது ஆதிமுகத்தின் காலப்பிரதிக்கு இது இரண்டாவது விருது, முன்னர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கவிதை நூலுக்கான கவிஞர் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவுப்பரிசையும் வென்றுள்ளது என்பது பின் குறிப்பு.

நாங்கள் இலக்கியகத்துக்கும், தேர்வுக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி.
எப்போதும் உடன் இருக்கும் நண்பர்களுக்கும், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கும் என் அன்பு ...





10 கருத்துகள்:

  1. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி
    விருதுகளும் கவிதைகளும்
    தொடர்ந்து தொடர மனமார்ந்த நல்வாத்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு