SIM
SWAP FRAUD
இன்று
எனது வங்கியிலிருந்து ஒரு
மின்னஞ்சல் வந்தது SIM
SWAP FRAUD
பற்றித்
தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள்
வங்கிக் கணக்கை பத்திரமாகப்
பாதுகாத்துக்கொள்ளுங்கள்
என்று.
அப்போதுதான்
SIM
SWAP FRAUD என்றால்
என்ன என தேடிப்பார்க்கத்
துவங்கினேன்.
தொழில்நுட்பம்
மிக வேகமாக வளர வளர,
தொழில்
நுட்பத்தைப் பயன்படுத்தி
கொள்ளையடிக்கும் கும்பலின்
மதிநுட்பமும் வளர்ந்து கொண்டே
தான் இருக்கிறது.
அதில்
மிகவும் நவீனமான திருடும்
முறை தான் SIM
SWAP FRAUD.
அதாவது,
சகல
உதவிகளுடனும் ஒரு திருடன்
உங்களது எண்ணை தனதாக்கிக்
கொள்வான்.
சிம்
கார்டு தரும் நெட்வொர்க்
நிறுவனத்தினரின் உதவியோடோ
அல்லது வேறு எந்த வகையிலோ
அவன் உங்களது எண்ணிலேயே புதிய
சிம் கார்டை வாங்கி விடுவான்.
உங்களது
பழைய சிம் கார்டு செயலிழந்து
விடும்.
பிறகென்ன,
உங்களுக்கு
வரும் அழைப்புகள்,
குறுஞ்செய்திகள்
எல்லாம் அந்த எண்ணுக்குத்
தானே வரும்.
இது
சாத்தியமா என்றால் சாத்தியம்
தான்.
நாமே
சிம் தொலைந்து விட்டது என
புகார் அளித்தால் அடையாள
அட்டையை வாங்கிக் கொண்டு
புதிய சிம் தருகிறார்கள்
அல்லவா .
அப்படித்தான்.
ஆனால்
இது சட்டத்துக்குப் புறம்பாக
நமது சிம் கார்டை வேறொருவர்
அபகரித்தல்.
ஒரு
திருடனிடம் உங்கள் வங்கிக்
கணக்கின் இணையப் பரிவர்த்தனைக்கான
பயனர் எண்,
கடவுச்சொல்
ஆகியவற்றை திருட முடிந்து
விட்டால் அடுத்த கட்டம்
முன்பெல்லாம் உங்களுக்கு
அழைத்து வங்கியிலிருந்து
வரும் One
Time Password ( OTP ) எண்ணை
எப்படியாவது நயவஞ்சகமாகப்
பேசி கேட்டு வாங்கி உங்கள்
வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத்
திருட முடியும்.
இப்போது,
உங்கள்
எண் அவன் வசம் இருப்பதால்
அதற்கு அவசியமற்று எளிதில்
திருடிக் கொள்வான்.
மேலும்,
மொபைல்
பேங்கிங் மூலம் வெகு சுலபமாக
உங்களது மொத்த வங்கிக்
கணக்கையும் மேலாண்மை செய்து
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இது
எப்படி செயல்படலாம் என்றால்
- இணைய திருடர்கள் உங்களது மின்னஞ்சலிலோ, வாட்சப் அல்லது முகநூல் வழியாகவோ ஒரு லிங்கை அனுப்பி நீங்கள் அதைத் தொடுவதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு ஏனைய விவரங்களை எடுத்துக்கொள்ள அல்லது உங்களிடமே வாங்கிக் கொள்வார்கள்
- பிறகு உங்களது எண்ணை மொபைல் ஆப்பரேட்டர்களிடம் சொல்லி ப்ளாக் செய்வார்கள்
- போலியான ஆதாரங்களையும் , ஆவணங்களையும் கொடுத்து உங்கள் பெயரிலேயே அந்த எண்ணை அவர்கள் வாங்குவார்கள்
- இப்போது நீங்கள் உங்கள் எண்ணை எதற்கெல்லாம் உபயோகித்தீர்களோ அதற்கெல்லாம் அவர்கள் உங்கள் முகமூடியுடன் எளிதில் உபயோகிப்பார்கள்
இதை
எளிதில் விளக்கும் படியாக
வங்கிகள் சில தகவல்களைத்
தந்துள்ளன அவற்றை இங்கு
நீங்கள் பார்க்கலாம்
இதிலிருந்து
நம்மை நாம் பாதுகாத்துக்
கொள்ள என்ன செய்யலாம் ?
- வழக்கத்துக்கு மாறாக நமது அலைபேசியில் சிக்னல் நெடுநேரம் இல்லாமல் போனால் வேறு எண்ணிலிருந்து உடனடியாக மொபைல் ஆபரேட்டரைத் தொடர்பு கொண்டு என்ன ஆகியிருக்கிறது என விசாரிக்க வேண்டும்
- உங்கள் எண் வேறு யாரோ ஒருவரால் ப்ளாக் செய்யப்பட்டிருப்பின் புகார் அளிக்க வேண்டும், மேலும் அந்த எண்ணைக் கொடுத்திருக்கும் வங்கிகளிலும் புகார் அளிக்க வேண்டும்
- வெளிநாட்டு எண் அல்லது தெரியாத எண்ணிலிருந்து வெறுப்பேற்றும்படி தொடர்ந்து அழைப்பு வந்தால் பதிலளிக்க வேண்டாம், அதற்கு பயந்து செல்பேசியை அணைத்து வைக்கவும் கூடாது. இதுவும் அவர்களது ஒரு யுத்தி.
- வங்கிப் பரிவர்த்தனையை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்
- நமது செல்பேசியின் IMEI எண்ணை எக்காரணத்தைக் கொண்டும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது
- வங்கியிலிருந்து அழைப்பதாகச் சொன்னாலும் நமது பயனர் கணக்கு, கடவுச்சொல், OTP போன்ற தகவல்களை யாருக்கும் சொல்லக் கூடாது.
நூற்றில்
ஒருவருக்கு அல்லது ஆயிரத்தில்
ஒருவருக்கு இப்படி நடக்கலாம்
..
ஆனால்
அது நாமாக இருக்கக் கூடாது
அல்லவா ?
விழிப்புடன்
இருப்போம்.
பகிருங்கள்
ஏமாற்றுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்
பதிலளிநீக்குநாம்தானே விழிப்புடன் இருக்க வேண்டும்
பயனுள்ள பதிவு நண்பரே
நன்றி
நன்றி அய்யா
நீக்குசிறந்த ஆய்வுப் பதிவு
பதிலளிநீக்குநன்றி அய்யா
நீக்குUseful
பதிலளிநீக்குநன்றி
நீக்குசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
பதிலளிநீக்குhttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
தகவலுக்கு நன்றி நண்பரே
பதிலளிநீக்கு