# 1
பெருங்கோடை நிலத்தில்
நாலே நாலு துளி தான்
பெய்திருக்க
அவசரமாய் வந்து
கவிதை கேட்கிறாய்
மழை வேண்டுமா
கவிதை வேண்டுமா
# 2
மென் தூறல் கிளர்த்தும்
மண் வாசனைக்கு
மயங்குபவன்
தவறவிடுகிறான்
நகரத்துக்குச் செல்லும் கடைசிப் பேருந்தை
# 3
முன்னேற்பாடுகள்
எதுவுமின்றி ஒரு
மழைநாளில்
நமக்குள் நிகழ்ந்துவிடுகின்ற
ஒரு முத்தத்தை
இன்னும் என்னால்
கவிதையாக்க முடியவில்லை.
# 4
முற்றத்தில்
மழை கவிதை எழுதிக்கொண்டிருக்க
மழைக் கவிதைதான் வேண்டுமா
மழை கவிதை எழுதிக்கொண்டிருக்க
மழைக் கவிதைதான் வேண்டுமா
# 5
முதன் முதலில்
என்னைச் சபித்தபடிப் பெய்கிறது
இந்த மழை. உன் கண்களில் பெய்யும்
மழையைப் பொருட்படுத்தாது
வழியனுப்பி வைக்கிறேன் நான்
இனிய தீபாவளி வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி. இனிய வாழ்த்துகள்
நீக்குஅருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்கு