திங்கள், 5 மார்ச், 2012

கவிதைகள்

நெடுந்தூரப்
பயணமானாலும்,
நெடுநாள் தங்கலாயினும்.
தனிமையைத்
தவிர்த்து விட
முடிகிறது எளிதாய்.
வழி நெடுகிலும்
என்னுடன்
வந்து கொண்டே
இருக்கிறதுன் காதல்.
குரலோசையகவும்,
குறுஞ்செய்திகளாகவும்.
***************************************************
ரயில் பயணத்தில்
எதிர் இருக்கையில்
உறங்கிக் கொண்டிருந்த
குழந்தை
அழகழகாகப்
பேசிக் கொண்டே
வந்தது உறக்கம்
வராமல் உட்கார்ந்திருந்த
என்னிடம்.
*************************************************
விபத்தில்
எல்லா இடத்திலும் தான்
அடிபட்டது என்றாலும்
கைக் கட்டில்
மட்டும் முத்தமிட்டு
விரைவில் நலமாகி வா
என நீ சொல்லிப் போனதில்
வருத்தம் தான் எனக்கு.
***************************************************
காதலர் தினப்
பரிசாக
இது வேண்டுமா
அது வேண்டுமா
எனக் கேட்டேன்
வழக்கம் போலவே.
எதுவும் வேண்டாம்
என்றாய்  வழக்கம் போலவே.
எதை வாங்குவது
என குழம்பி
முழம் மல்லிகைப்
பூவுடனும் - சில
முத்தங்களுடனும்
முடித்துக்
கொள்கிறேன் இப்போதும்.
************************************************
என் கண்களும்
உதடுகளுமே
உன்னிடம் வெகுநேரம்
பேசிக் கொண்டிருக்க,
பொறுமையிழந்த
என் கை கடைசியில்
உன் தலை முடியைக்
கொதிவிட்டுத்
தேற்றிக் கொள்கிறது. 
****************************************************
எல்லாரிடத்தும்
சொல்வதற்காக
எதையாவதொன்றை
வைத்திருக்கிறாய்
எப்போதும்.
என்னிடம் மட்டுமே
சொல்ல வைத்திருக்கும்
உன் காதலை
எப்போது சொல்லப் போகிறாய்.?
*******************************************************
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக