புதன், 20 நவம்பர், 2024

நின்நெஞ்சு நேர்பவள் - அறிமுகம் - விமர்சகர் ந.முருகேசபாண்டியன்

 அண்மையில் கவிஞர் இரா.பூபாலன் வெளியிட்டுள்ள நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. பூபாலன் அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட பெண்கள் பற்றி கோட்டோவியமாகக் கவிதைகள் எழுதியுள்ளார்.


காலந்தோறும் அப்பாகளின் நினைவுகளில் மிதக்கிற மகள் பற்றிய பிம்பத்தை முன்வைத்து ஏற்கனவே சில கவிஞர்கள் கவிதை எழுதியிருந்தபோதிலும், இரா.பூபாலனின் ஊசல் கவிதை வரிகள் தனித்து விளங்குகின்றன.
மகள் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினாலும் அப்பாவின் பார்வை, மகள் என்ற வட்டத்திற்குள்ளேயே சுற்றுவதுதான் நடைமுறை. ஊசல் கவிதையின் எளிய வரிகள் வாசிப்பில் அப்பாகளைத் தொந்தரவு செய்யும்.

ஊசல்
மகள்கள் வெகு வேகமாக
வளர்ந்து விடுகிறார்கள்
அம்மாக்களின் செருப்பை
அணிந்துகொள்ளும் அளவுக்கு.
அவர்களின் உடையையும்
அணிந்துகொள்கிறார்கள்
அம்மாக்கள் தங்கள்
அணிகலன்களை
கைப்பைகளை
பங்கிட்டுக்கொள்கிறார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
அப்பாவின் மடியிலிருந்து தூரமாகி
அம்மாவின் தோழியாகிவிட்ட
ஒரு சிறுமியை
அப்பாக்கள் கனவுகளில்
துரத்தித் திரிகிறார்கள்

- எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன்





-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக