பெண் உடனான உறவு என்பதை காமத்தோடு மட்டும் தொடர்பு கொண்டு பார்ப்பது சமூகத்தின் சாபக்கேடு. அதிலிருந்து மாறுபட்ட சில குரல்களை கேட்பது நம்மை மகிழச் செய்யும். பூபாலன் நம்மை மகிழச் செய்துள்ளார்.
வெவ்வேறான பெண்களுடனான பழக்கம் புது புது உலகை திறப்புக்கொள்ளச் செய்யும். அபூர்வங்களையும் அசாத்தியங்களையும் நம்முள் நிகழ்த்தியபடி இருப்பர். மொழியை அவ்வளவு திறம்பட பயன்படுத்துவர். சின்னஞ்சிறு சொல்கூட நம் ஆயுளுக்கும் நம்முள் தங்கி மலர்த்தியபடி இருக்கும். நமக்கேயான சில பெண்களை நினைவில் அமரச் செய்தபடி இருக்கிறது இரா. பூபாலனின் இத்தொகுப்பு.
- கவிஞர் ந.பெரியசாமி