புதன், 23 ஜூன், 2010

என் காதல்...

தோழி..

உன் கனவுகள் எதையும்
நான் கலைத்து விடவில்லை..

உன் பூக்களை ரசித்தேன்
பறிக்கவில்லை ...

உன் சிறகுகள் இன்னும்
உன் வசம் தான் இருகின்றன...

உன் விருப்பப் படி
நீ எது வேண்டுமானாலும் செய்யலாம்...
உன்,என் எல்லைகளுக்குட்பட்டு ...

நான் என் சுயத்திற்கு
தரும் அதே மரியாதையை
உன் சுயத்திற்கும் தருகிறேன்..

பிறகும் ஏன் யோசிக்கிறாய்
என் காதலை ஏற்க...?

உனக்கு சிறகுகள் தருவேனா தெரியாது..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ..
என் காதல உனக்கு விலங்கு பூட்ட
ஒரு போதும் நினைக்காது .....

1 கருத்து: