புதன், 30 செப்டம்பர், 2015

தமிழ்ப் பாடம் தேவை தமிழன் பாடம்

நமது சூரியன்கள்
நமக்கு முன்னரே உறங்கச்
சென்று விடுகின்றன.

நமது ஆயுதங்கள்
துருப்பிடிக்கலாயின.

நமது படைகள்
போர்த் தொழில்
மறந்துவிட்டிருக்கிறார்கள்.

நமது ஊர் அமைதியின்
பக்கம் சாய்ந்துவிடவில்லை.

நாம் தான்
முழங்காலிட்டும்,
முனகிக் கொண்டும்
கையேந்தியுமே
வாழ்வதற்குப்
பழக்கப்பட்டுவிட்டோம்.

வாழ்வை வரலாறாக்கி வாழ்ந்த
பாட்டன் தமிழனின்
மிச்ச ரத்தம்தான்
இப்போது நீர்த்துவிட்டதென
சொல்லக் கூசுகிறது.

ஊரார் பெருமை பேசியது போதும்
இனியேனும் வகுப்பெடுங்கள்
தமிழ்ப்பிள்ளைகளுக்கு
தமிழன் பெருமைகளை.

____
இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : புதுக்கவிதை எண் : 4

1 கருத்து: